2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தமிழர்களிடம் பணம் கறந்த போலி சி.ஐ.டி.யினர் கைது

Super User   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குற்றப் புலனாய்வுப் பிரிவைச் (சி.ஐ.டி) சேர்ந்த புலனாய்வு உத்தியோகஸ்தர்களாக தம்மை காட்டிக்கொண்டு, தமிழ் மக்களை அச்சுறுத்தி பணம் கறந்து வந்த  இருவரை பம்பலப்பிட்டி பொலிஸார் நேற்று மாலை கைது செய்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்வோம் என மிரட்டி, வர்த்தகர்களிடமிருந்து பணம், நகை என்பனவற்றை இவர்கள் பெற்று வந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இச்சந்தேக நபர்கள் கடவத்தை மற்றும் மருதானையை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. (DM)
 


You May Also Like

  Comments - 0

  • Kogilavani Thursday, 26 August 2010 06:40 PM

    இவ்வாறான நபர்களால் பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்குமே களங்கம் ஏற்படுகிறது. இவற்றைத் தடுப்பதன் மூலமே பொதுமக்களின் நம்பிக்கையை அதிகாரிகள் பெறமுடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .