2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ.தே.க. கண்டனம்

Super User   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ஜனாதிபதி உறுதிப்படுத்தியமை எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கை எனவும் இது கடுமையாக கண்டிக்கப்பபட வேண்டியது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

இந்நடவடிக்கைக்கு எதிராக தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஐ.தே.க. போராடும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இந்த முன்னாள் இராணுவத் தளபதியை தூக்கிலிட வேண்டுமென அரச ஊழியர்கள் சிலர் பகிரங்கமாக கூறிய நிலையில் அரசாங்கம் மேற்படி நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறது என்பதை நாம் அறிந்திருந்தோம் எனவும் மங்கள சமரவீர கூறினார். (DM)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .