2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாடாளுமன்றத்தில் பாட்டுப் பாடிய அரசியல்வாதிகள்

Super User   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

நாடாளுமன்றத்தில் இன்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் பாட்டுப் பாடி, சபையை கலகலப்பாக்கினர்.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா ஆகியோரே தமது பாடும் திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் ஆவர்.

வரவுசெலவுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் நடைபெற்றபோது தயாரிசிறி ஜயசேகர எம்.பி. தானே உருவாக்கிய பாடலொன்றைப் பாடினார்.  சிரேஷ்ட அமைச்சர்களின் நிலைமையை வர்ணிப்பதாக அப்பாடல் அமைந்திருந்தது.

அதற்கு பதிலாக அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா பாடலொன்றைப் பாடினார். ஐ.தே.க. மாநாடு முடிந்தபின்னர் தயாசிறிய ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து அக்கட்சித் தலைவர் ரணில் பாடும் பாடல் இதுவென அமைச்சர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Saturday, 11 December 2010 09:24 PM

    நன்றாக பாடியவர் யார் என்று எஸ் எம் எஸ் மூலம் தேர்ந்தெடுக்கும் வசதி உண்டோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .