2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேர்தல் ஆணையருக்கு நீதிமன்ற தடையுத்தரவு

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் ஆணையாளரோ அல்லது தெரிவத்தாட்சி அலுவலரோ உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கக் கூடாதென்று ஒரு தடையுத்தரவையும் தேர்தல்களை நடத்தக்கூடாது என்று மற்றொரு தடையுத்தரவையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த மனுமீதான தீர்ப்பு வழங்கப்படும்வரை இந்த தடையுத்தரவு நடைமுறையில் இருக்குமெனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .