2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போர்க் குற்றம் குறித்து பொறுப்புக்கூறும் சர்வதேச பொறிமுறை வேண்டும்: அமெரிக்க செனட்சபை தீர்மானம்

Super User   / 2011 மார்ச் 03 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(டியன் சில்வா)

போர் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு சுயாதீனமான சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஐ.நாவையும்  கோரும் தீர்மானமொன்றை அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை நிறைவேற்றியுள்ளது.

ளு. சுநள 84  என்ற இத்தீர்மானம் இன்று செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. யுத்த காலத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்துவதற்கு நம்பகமான முறையான பொறிமுறையொன்றை இலங்கை அரசாங்கம் வழங்குவது தொடர்பான கரிசனையை இது வெளிப்படுத்துகிறது என அமெரிக்க தூதுரக அதகாரியொருவர் டெய்லி மிரருக்கு இன்று தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தை ஆராய்ந்து பொருத்தமான மாற்றங்களை செய்யும் என வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமால் பெரேரா டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த செனட்டர் ரொபர்ட் கசே கொண்டுவந்த மேற்படி தீர்மானம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .