2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'பறிமுதல் சட்டமூலம் வெளிநாட்டு முதலீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்'

Super User   / 2011 நவம்பர் 14 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மையில் நிறைவேற்றப்பட்ட பறிமுதல் சட்டமானது இலங்கைக்கு எதிர்மறையான புள்ளிகளை வழங்கும்  எனவும் அது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வருவதை தடுக்கும் எனவும் சர்வதேச கடன் தரப்படுத்தல் முகவரகமான 'மூடீஸ்' அறிக்கையொன்றில் எச்சரித்துள்ளது.

யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை அங்கீகரித்துள்ள இவ்வறிக்கை செயற்பாடு குறைந்த நிறுவனங்கள், குறைவாக பயன்படுத்தப்படுகின்றன சொத்துக்களை சுவீகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்துள்ளது.

இவ்வருட முற்பகுதியில் இலங்கையின் கடன் மதிப்பீட்டை உயர்த்திய தரப்படுத்தல் முகவரகங்களில் பிட்ச் மற்றும் ஸ்டான்டர்ட் அன்ட் புவர் ஆகியனவற்றுடன் மூடீஸும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .