2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச வேண்டுமாம்: செல்வராசா எம்.பி.

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தினை  நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பித்த நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தேநீர் இடைவேளையின்போது உரையாடுகையில் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா மேலும் கூறுகையில்...

நாடாளுமன்றத்தில் தேநீர் இடைவேளையின்போது பீலிக்ஸ் பெரேரா, சுமந்திரன், சம்பந்தன் ஆகியோருடன் நானும் உரையாடிக் கொண்டிருந்தேன். அச்சமயம், அவ்விடத்திற்கு வந்த ஜனாதிபதி - நீதித்துறை பற்றிய சில விடயங்களை கூறியதோடு, உங்களுடன் நான் ஆறுதலாக உரையாடவேண்டும், அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

எது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேசவுள்ளார் என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், எம்முடன் பேசவேண்டும் என்று குறிப்பிட்டமை முக்கியமான விடயமாகும் என்று குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0

  • Sumathy m Thursday, 08 November 2012 11:36 PM

    முன்னர் எத்தனையோ தடவை பேசியும் ஒன்றும் நடக்கவில்லை என்று தானே கூட்டமைப்பினர் சொல்லினம். பேந்து என்ன பேசக்கிடக்கு. வழக்கமாக சொல்லுற மாதிரி சர்வதேசத்துக்கு போய் முறையிடுங்கோ. இந்தியாவும் உங்களை கைவிட்டிட்டுது. தயவுசெய்து உருப்படியாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யுங்கோ. புண்ணியம் கிடைக்கும்.
    சுமதி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .