2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஹவத்தைக்கு இராணுவ பாதுகாப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை பிரதேசத்தின் பாதுகாப்புக்காக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் மர்மக் கொலைகளை அடுத்தே இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
இந்நிலையில், உடவளவை மற்றும் குருவிட்ட இராணுவ முகாம்களைச் சேர்ந்த சுமார் 60 இராணுவ வீரர்கள் கஹவத்தை பிரதேசத்தின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே அப்பகுதியில் நிலைகொண்டுள்ள பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு மேலதிகமாகவே இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

பொலிஸாரின் கோரிக்கைக்கு இணங்கே கஹவத்தையின் பாதுகாப்புக்கு இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய இராணுவ பேச்சாளர், அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் 24 மணிநேர பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளனர் என்று கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .