2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாயு கசிவினால் இருவர் பலி: 9 பேர் பாதிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால் இருவர்  உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 வாயு  சேமிப்பில் ஈடுபட்ட போதே இக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கும்போதே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிக்காயங்கள் இல்லையென்றும் நச்சு வாயுவை சுவாசித்ததனால் இவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதில் இருவர் அவசர சிகிச்சைப்பிரிவிலும் நால்வர் விபத்து சேவை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரின் சடலம்  கிரிபத்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .