2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹெரோயினுடன் பாக்.பிரஜை கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

300 கிராம் நிறைகொண்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜையொருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்கப்பிரிவு அறிவித்துள்ளது.

அவரது பயணப்பைகள் இரண்டில் தலா 100 கிராம் ஹெரோயினும் அணிந்திருந்த பாதணியில் 100 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டதாக அப்பிரிவினர் அறிவித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜை அடிக்கொரு தடவை இலங்கைக்கு வந்துசெல்பவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .