2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பஸ் மோதியதில் பாதசாரி பலி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளையிலிருந்து கண்டி நோக்கி ஏ-9 வீதியில் பயணித்த தனியார் பஸ்ஸொன்று 13 ஆவது மைல்கல்லில் வைத்து வீதியை  கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார் என்று அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று(05) காலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அக்குரணை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் நவாஸ் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .