2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டிஃபென்டர் வாகனத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாவத்தை கெத்தாராமைக்கு அண்மையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீதிச்சோதனை சாவடியை அமைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வெள்ளை நிற டிஃபென்டர்  ரக வாகனத்தை கறுப்பு நிறத்திலான இறப்பர் சீட்டினால் மூடி அதற்குள் மறைத்துவைத்து ஆயுதங்களை கடத்திய அறுவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வாகனத்துக்குள்ளிருந்து இரண்டு கைக் கோடரிகள், அகலக்குழாய்கள், இரும்பு மற்றும் அலுமினிய குழாய்கள் இரண்டு, கத்தி ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தாங்கள் களனியைச்சேர்ந்தவர்கள் என்றும் கொழும்பில் உள்ள விருந்தகமொன்றுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .