2024 மே 09, வியாழக்கிழமை

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள்; கொழும்பில் நிகழ்வு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை நினைவு கூறும் நிகழ்வொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பிரதம அதிதியாக கலந்த கொண்டு  முக்கிய உரையினையாற்றினார்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஜவன், பேராசிரியர் டாக்டர் ஹஸ்புள்ளா ஆகியோரும் உரைகளை ஆற்றினர்.

இடம்பெயர்வு குறித்து மாணவி நஹ்லா அனீஸ் ஆங்கிலத்தில் காத்திரமான உரையினை இங்கு முன்வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர், உறுப்பினர்கள், பன்னாட்டு துாதுவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்களும் கலந்துகொண்டனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X