2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையை வந்தடைந்தார் தாய்லாந்து பிரதமர்

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து பிரதமர் ப்ரயுட் சான் ஓசா உள்ளிட்ட குழுவினர் இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (12) இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இன்று பகல் 2.45 மணியளவில் தாய்லாந்து பிரதமர் உள்ளிட்ட 40 பேர் கொண்ட குழு வி​சேட விமானம் மூலம்  இலங்கையை  வந்தடைந்துள்ளனர்.

 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்களான பொன்சேகா, வஜிர அபேவர்தன, பைஸர் முஸ்தபா, உள்ளிட்டவர்கள் விமான நிலையத்தில் வைத்து தாய்லாந்து பிரதமரை வரவேற்றுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .