2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்குக் கடிதம்

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி விடுவிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (12) கடிதம் எழுதியுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர், தமது வழக்கு விசாரணைகளை வவுனியா நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, இன்று 18 ஆவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .