2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடைய, தங்கவேல் ஜெயராஜ்  என்ற நபரே ஞாயிற்றுக்கிழமை (15) மாலை முதல் காணவில்லையென, அவரது மனைவியினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து இவர் தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த நபர் நேற்றைய தினம் (16) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சின்ன உப்போடை, வாவிக்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமாவார்.

மேலும் இவரின் மரணம் தொடர்பாக மட்டக்களப்பு  பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .