2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சைக்கிளோட்ட வீர​ரின் மரணத்தையடுத்து ‘Rumble in the jungle’ போட்டி இடைநிறுத்தம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜூன் 14 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெற்ற ‘Rumble in the jungle’  மலையேறும் சைக்கிளோட்டப் போட்டியின் போது காணாமல் போன வீரரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேபாளத்தைச் சேர்ந்த நாராயனன் கோபால் மஹராஜன் என்ற போட்டியாளர்  போட்டியில் கலந்துக்​கொண்டிருந்த வேளை,குடாஓயா வில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனமானது இந்தப் போட்டியை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியா, ஜேர்மன், இத்தாலி மற்றும் சுவிட்ஸலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 39 வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்துக்​கொண்டதுடன், மஹராஜனைத் தவிர நேபாளம் நாட்டிலிருந்து மேலும் இரு வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .