2024 மே 09, வியாழக்கிழமை

திவுலுப்பிட்டி பிரதேசத்தில் பெண்ணொருவர் கொலை

Editorial   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவுலுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் வீடு திரும்பும் வேளையில் வீட்டின் பின்கதவால் உள்நுழைகையில், அவரது மனைவி வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் காணப்பட்டதை கண்டு, உடனடியாகப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 42 வயதுடையவரெனத் தெரிவித்தப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X