2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 14 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக, அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்ஸலாந்து ஆகிய நாடுகளில் தங்கியிருந்த  நிலையில், நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதில் 15 இலங்கையர்கள் இன்று காலை 6.20 மணியளவில், அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன், 11 இலங்கையர்கள் காலை 9 மணியளவில் சுவிட்ஸலாந்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட 26 பேரில் சிங்களவர்களும் , தமிழர்களும் காணப்படுவதாக விமான நிலையத்தின் குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .