2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மார்ச் மாத இறுதியில் பெறுபெறுகள்

Gavitha   / 2021 ஜனவரி 24 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் முடிவுகள், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் அல்லது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெறுபேறுகள் வெளியான பின்னர், மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி, குறுகிய காலத்துக்குள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2021ஆம் ஆண்டுக்கான உயர்தர வகுப்புகளை, எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த வருடம் டிசெம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்றது என்றும் மாணவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகைியல், பெறுபேறுகள் விரைவாக வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .