2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யானையின் குழப்பத்தால் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை நகரில் இடம்பெற்ற மிஹிது பெரெஹெர ஊர்வலத்தின் போது, யானையொன்று குழப்பமடைந்ததால், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இன்றைய தினம் (12) உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த இவர், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உடவளவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த கான்ஸ்டபிள் கடந்த முதலாம் திகதி கஹவத்தையில் இடம்பெற்ற பெரஹெர ஊர்வலத்தின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.

 யானை குழப்படைந்த இந்த சம்பவத்தில் பெரஹெரவை பார்க்கச் சென்ற 31 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே பொலிஸ் கான்ஸ்டபிள்  இன்று உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .