2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

7 ½ இலட்சம் ரூபாய் செலவில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார் கிரிவெஹர தேரர்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜூன் 14 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரருக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் நலனை விசாரிப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

தேரரின் சிசிச்சைகளுக்கான அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் வழங்கப்படுமென புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன்,தேரரரை இரத்மலானையிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு  கொண்டுச் சென்று, மீண்டும் நாரஹேன்பிட்டியவுக்கு இராணுவ விமானம் மூலம் ​கொண்டு செல்ல ஏழரை இலட்சம் ரூபாய் செலவாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தேரருக்கு நேற்று இரவும் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  இவரது தலையில் சிதைவடைந்த ரவைகள் இருப்பதாகத் தெரிவித்தே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் சிரேஸ்ட ​பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவர் மஹாசென் ஆலயத்தின் பிரதான கப்புராளையான அசேல பண்டாரவென அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபரின் வீட்டின் பின்புறமிருந்து, கைக்குண்டுகள் பத்தும் கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .