2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரையிறுதியில் அன்டி மரே

Editorial   / 2017 ஜூன் 09 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற, உலகின் முதல்நிலை வீரரான அன்டி மரே, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.  

ஐக்கிய இராச்சியத்தின் அன்டி மரே, 2-6, 6-1, 7-6 (7-0), 6-1 என்ற செட் கணக்கில், உலகின் ஒன்பதாம் நிலை வீரரான, ஜப்பானின் கீ நிஷிகோரியை வென்றார்.  

இதேவேளை, இடம்பெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீரரான, சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா, 6-3, 6-3, 6-1 என்ற நேர் செட்களில், உலகின் எட்டாம் நிலை வீரரான, குரோஷியாவின் மரின் சிலிக்கை வென்று, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.  

முன்னதாக, உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, தனது காலிறுதிப் போட்டியில், 7-6, 6-4 என்ற நேர் செட்களில், பிரான்ஸின் கரோலின் கர்சியாவை வென்று, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.  

உலகின் நான்காம் நிலை வீராங்கனையான, றோமானியாவின் சிமோனா ஹலெப், தனது காலிறுதிப் போட்டியில், 3-6, 7-6, 6-0 என்ற செட்களில், உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டொலினாவை வென்று, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .