2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நான்காவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி

Super User   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூஸிலாந்து அணியுடனான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இன்று பெங்களுரில் பகல் இரவு ஆட்டமாக  நடைபெற்ற 4 ஆவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி  50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 315 ஓட்டங்களைக் குவித்தது.

ஜேம்ஸ் பிராங்க்ளின் 69 பந்துவீச்சுகளில் 3 சிக்ஸர், 12 பௌண்டரிகள் உட்பட 98 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய பந்துவீச்சாளர்களில் யூஸுப் பதான் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 108 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 4 ஆவது விக்கெட்டை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

188 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 5 ஆவது விக்கெட் வீழ்ந்தது. எனினும் அதன்பின் ஜோடி சேர்ந்த யூஸுப் பதானும் சௌரப் திவாரியும் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

யூஸுப் பதான் 96 பந்துவீச்சுகளில் 7 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகள் அடங்கலாக 123 ஓட்டங்களைக் குவித்தார். இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் யூஸுப் பதானின் முதலாவது ஆவது சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்திய அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. யூஸுப் பதான் இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.

 5 போட்டிகள் கொண்ட இத் தொடரில் இந்திய அணி 4-0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .