2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்தியாவை வென்று சம்பியனானது பங்களாதேஷ்

Editorial   / 2018 ஜூன் 10 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்றுவந்த பெண்களுக்கான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் சம்பியனாகியுள்ளது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இனிங்ஸின் இறுதிப் பந்தில் வெற்றிக்குத் தேவையான இரண்டு ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுகளால் இந்தியாவை வென்றே பங்களாதேஷ் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவி சல்மா காட்டூன் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவி ஹர்மன்பிறீட் கெளர் 56 (42) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ருமானா அஹமட், காடிஜா துல் குப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 113 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், நிகர் சுல்தானா 27 (24), ருமானா அஹமட் 23 (22) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பூனம் யாதவ் 4, ஹர்மன்பிறீட் கெளர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகியாக ருமானா அஹமட் தெரிவாகியதோடு, தொடரின் நாயகியாக ஹர்மன்பிறீட் கெளர் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .