2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பார்சிலோனா – கெட்டாபே போட்டி சமநிலை

Editorial   / 2018 பெப்ரவரி 12 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று  இடம்பெற்ற பார்சிலோனா, கெட்டாபே அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இப்போட்டியில், லியனல் மெஸ்ஸி, பிலிப் கோச்சினியோ ஆகிய இருவரின் உதைகளையும் கெட்டாபேயின் கோல் காப்பாளர் விசென்டே குவைட்டா தடுத்திருந்ததுடன், யெரி மினா தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்துக்கு வெளியால் சென்றிருந்தது. மறுபக்கமாக, போட்டியின் இறுதிக் கணக்கில், கோல் கம்பத்திலிருந்து 30 அடி தூரத்திலிருந்து கெட்டாபேயுக்கு கிடைத்த பிறீ கிக்கை விடொரினோ அன்டியூன்ஸ் கோல் கம்பத்தை நோக்கி, அதை கோல் கம்பத்துக்கு மேலால் பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க் அன்ட்ரே டியர் ஸ்டீகன் தட்டி விட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .