2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யூரோ தகுதிகாண் போட்டிகள்: போர்த்துக்கல், பிரான்ஸ், இங்கிலாந்து வென்றன

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் யூரோ தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், நடப்புச் சம்பியன்களான போர்த்துக்கல், உலக சம்பியன்களான பிரான்ஸ் மற்று இங்கிலாந்து உள்ளிட்டவை வென்றுள்ளன.

லித்துவேனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற அந்நாட்டுடனான குழு பி போட்டியொன்றில் 5-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது. போர்த்துக்கல் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு கோல்களையும், வில்லியம் கார்வல்ஹோ ஒரு கோலையும் பெற்றனர். லித்துவேனியா சார்பாகப் பெறப்பட்ட கோலை வைடெளடஸ் அன்ட்றியுஸ்கெவிசியுஸ் பெற்றிருந்தார்.

இதேவேளை, தம்நாட்டில் இன்று அதிகாலை  இடம்பெற்ற அன்டோராவுடனான குழு எச் போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது. பிரான்ஸ் சார்பாக, கிங்ஸ்லி கோமன், கிளமன்ட் லெங்கலெட், விஸாம் பென் யெடர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தம்நாட்டில் இன்று அதிகாலை  இடம்பெற்ற கொஸோவாவுடனான குழு ஏ போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றிருந்தது. இங்கிலாந்து சார்பாக, ஜடோன் சாஞ்சோ இரண்டு கோல்களையும், ரஹீம் ஸ்டேர்லிங், ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றிருந்ததோடு ஓவ்ண் கோல் முறையில் ஒரு கோல் கிடைக்கப் பெற்றிருந்தது. கொஸோவா சார்பாக, வலொன் பெரிஷா இரண்டு கோல்களையும், வெடாட் முரிக்கி ஒரு கோலையும் பெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .