2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சமாதான நீதவானாக ஏறாவூரில் முதலாவது பெண் சத்தியப்பிரமாணம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஜூலை 19 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகர - பிரதேச செயலகப் பிரிவில், சமுர்த்தித் திட்ட உதவியாளராகப் பணியாற்றும் அப்துல் மஜீத் ஸபீனா அரப், அகில இலங்கை சமாதான நீதவானாக, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஏறாவூர் பிரதேசத்தில், அகில இலங்கை சமாதான நீதிவானாகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட முதலாவது பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.

நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில், இவரது சத்தியப்பிரமாண நிகழ்வு, இன்று (19) இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .