2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கைவிடப்பட்ட சிசு மட்டு. வைத்தியசாலையில் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜவ்பர்கான், ஆர்.அனுருத்தன்))

கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவொன்று  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிறந்து 4 நாட்களேயான  இவ் ஆண் குழந்தை மட்டக்களப்பு இருதயபுரம் பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இக்குழந்தை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .