2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மட்டக்களப்பில் அனர்த்த முகாமைத்துவ மாநாடு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்.,றிபாயா நூர்)

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மரினா மொகமட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா,நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா ஆகியோர் கலந்து கொண்டனர.

அனர்த்த முகாமைத்துவம் குறித்து விரிவாக ஆராயப்படும் இம்மாநாட்டில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.



 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .