2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

களுவாஞ்சிக்குடி வீதி விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                    (ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை மாலை 6.20 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 27 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், மின் கம்பத்துடன் மோதிய போதே இவர் பலியானார்.

மரணமானவர் களுவாஞ்சிக்குடியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சின்னையா வரதன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .