2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் நாளை வழங்கப்படும்

Super User   / 2010 நவம்பர் 08 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கிழக்கு மாகாண அரசாங்க பாடசாலைகளில் ஆசிரியர் சேவை 3-ஈ இற்கு தெரிவான பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு முதலமைச்சர் காரியாலயத்தில் வைத்து வழங்கப்படவுள்ளது.

இந்நியமணக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு  நியமனக் கடிதங்களை வழங்கிவைப்பார்.

கிழக்கு மாகாண அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு இவ்வருடம் ஜூன் மாதம் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .