2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வலது குறைந்தோருக்கான மாதாந்த கொடுப்பனவு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வலது குறைந்தோருக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று மாலை ஆரையம்பதி சமூக சேவைகள் மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன், மற்றும் ஆரையம்பதி சமூக சேவை உத்தியோகத்தர்களான கே.கலாதேவன், டி.அம்பிகாவதி உட்பட கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 27 பேருக்கு தலா மூவாயிரம் ரூபா வீதம் 24000ரூபா வழங்கப்பட்டது.
இப்பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே ஏழு பேர் இக்கொடுப்பனவை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .