2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மதுபானசாலை விவகாரம்; ஏட்டிக்கு போட்டியாக ஆர்ப்பாட்டங்கள்

Super User   / 2012 நவம்பர் 14 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டு. மண்முனைப்பற்று பிரதேசத்தில் புதிய மதுபானசாலை தொடர்பில் இரு வேறு ஆர்ப்பாட்டங்கள் இன்று இடம்பெற்றுள்ளன. புதிய மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இன்று புதன்கிழமை நண்பகல் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக சுலோகங்களை எந்திவாறு வருகை தந்த இவர்கள் புதிய மதுபானசாலை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரினர். புதிய மதுபானசாலை திறப்பதற்கு அனுமதி வழங்கவும், மதுபானசாலை திறப்பதற்கு ஆட்சேபனை இல்லை, எதிர்ப்பு இல்லை, ஊர்ப் பகுதி இல்லை போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கி நின்றனர்.

இதேவேளை, இந்த பிரதேசத்தில் புதிய மதுபானசாலை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என கோரி மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இன்று புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி:

மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்





You May Also Like

  Comments - 0

  • ramm Wednesday, 14 November 2012 12:07 PM

    “குடியின் போதையில் வாய்ச்சண்டை முற்றி அடிதடி கொலை, குடிப்பழக்கம் காரணமாக கடனாளியாகி குடும்பமே தற்கொலை, குடிபோதையில் மனைவி, குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி” என அன்றாடம் மூன்று நான்கு செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன.இந்த பிரதேசத்தில் புதிய மதுபானசாலை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம்.

    Reply : 0       0

    vimal999 Wednesday, 14 November 2012 05:24 PM

    செம காமெடி

    Reply : 0       0

    VKD Wednesday, 14 November 2012 05:33 PM

    மீசை முளைக்காத சிறுவர்களும் காலுக்கு செருப்பு இல்லாத ஏழைகளுக்கும் "மதுபான சாலை" முக்கியமாகிவிட்ட கலாசாரத்திற்கு தமிழர்கள் வந்துவிட்டார்கள். அதுவும், ஆரையம்பதி, கல்லடி போன்றபகுதிகளில்... இதற்கு காணி கட்டடங்களை வழங்க ஊரவர்கள் முன்வரக்கூடாது.

    Reply : 0       0

    JJ Thursday, 15 November 2012 03:34 AM

    குடிகார பசங்களா....!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .