2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

50 குடும்பங்களுக்கு கிணறுகள்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 03 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சத்தாம் ஹுஸைன், ஸம்ஸம், ஐயன்கேணி, மிச் நகர், ஆகிய கிராமங்களிலும்  செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பு, மைலம்பாவெளி ஆகிய  கிராமங்களிலும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள தெரிவுசெய்யப்பட்ட  50 குடும்பங்களுக்கு  கிணறுகள் அமைக்கப்படுவதாக தாஜுல் மில்லத் ஹிஸ்புல்லாஹ் மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.றவூப் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் ஹிரா பவுண்டேசன் நிறுவனத்தினூடாக இக்கிணறுகள் அமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதுவரைகாலமும் தங்களது வீடுகளில் கிணறுகளை அமைப்பதற்கான  பொருளாதார வசதியின்றியுள்ள   இக்குடும்பங்கள் ஒவ்வொன்றுக்குமான ஒவ்வொரு கிணறும் 33,000 ரூபா செலவில்  சிறந்த கட்டட நுட்பத்துடன் நீண்டகாலத்துக்கு பாவிக்கக்கூடியவாறு  உறுதியாக அமைக்கப்படுவதாகவும்  எம்.எஸ்.றவூப் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .