2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் இளைஞர்கள் படுகாயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலை, தன்னாமுனை என்ற இடத்தில் நேற்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தரியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பயணித்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே, இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த எம். நிப்றாஸ் (வயது 23) எம். அஸீம் (வயது 22) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்த ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .