2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குளவி கொட்டில் 15 பேர் பாதிப்பு

Kogilavani   / 2015 நவம்பர் 16 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் இன்று (11) காலை, கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் 15 பேர் பாதிப்படைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் போது கழுகு ஒன்று மரத்தில் இருந்த குளவி கூட்டை கலைத்ததனால்  குளவிகள் கலைந்து, கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது தாக்கியுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர்களில் 13 பெண்களும் 2 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .