2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாராவத்தை தோட்ட தமிழ் வித்தியாலயத்துக்கு ஒழு கோடி ரூபா செலவில் இரு மாடி கட்டிடம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 12 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ராவின்)

நீண்ட காலமாக இட நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள பாராவத்தை தோட்ட தமிழ் வித்தியாலயத்துக்கு ஒரு கோடி ரூபா செலவில் இரு மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு மத்திய மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் மத்திய மாகாண முதலமைச்சர் மகீபால ஹேரத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் பிரேம்லால் ஜயசேகர, மாகாணசபை உறுப்பினர்களான ரம்யகுமார வீரசிங்க, நிலந்த ஜயக்கொடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .