2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கைத்தொலைபேசியில் ஆபாச காட்சிகளை வைத்திருந்த இளைஞர்களுக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கையடக்க தொலைபேசியில் ஆபாசக் காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்த இரு இளைஞர்களுக்கு 2500 ரூபாய்  வீதம் கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கநாயக்க அபராதம் விதித்துள்ளார்.

கையடக்க தொலைபேசியில் ஆபாசக் காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படும் மேற்படி இரு இளைஞர்களையும் கைதுசெய்த கட்டுகஸ்தோட்டை பொலிஸார், கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கநாயக்க முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தியபோதே இதற்கான அபராதம் விதிக்கப்பட்டது.

கண்டி அத்தரகம மற்றும் வெரல்லகம் ஆகிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவ் இளைஞர்கள் இருவரும்; 20 வயதும் 22 வயதும் உடையவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .