2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
 

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நோட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல்ரீ தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சௌந்திரராஜன் பரமேஸ்வரி (வயது 46) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

வீட்டுக்கு அருகில் உள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்தில் குப்பை கொட்டுவதற்காகச் சென்ற  இவர்,  வழுக்கிச்சென்று அந்நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் டிக்கோயா, கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான விசாரணையை நோட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .