2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இ.தொ.ஐ.மு., ஐ.தே.கவில் போட்டி

Kanagaraj   / 2013 ஜூலை 29 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னனி எதிர்வரும் மத்திய மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுவதென தீர்மானித்திருப்பதாக கட்சியின் செயலாளரும் முன்னால் மத்திய மாகாண சபையின் ஜக்கிய தேசிய கட்சி உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜக்கிய தேசிய கட்சி தமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாகவும் ஏற்றுக் கொண்ட விடயங்கள் தொடர்பாக அக்கட்சியின் செயற்குழுவில் பேசி இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னனி சார்பில் இருவர் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் விலைவாசி ஏற்றம் 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக இந்த தேர்தலில் மக்களுக்கு விளக்கமளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • k,jeyatheeswaren Tuesday, 30 July 2013 06:39 AM

    தொரைக்கு எதிர் கட்சி தலைவரு பதவி கெடைக்குதோ...??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .