2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிவனொளிபாதமலைக்குச் சென்ற ஐவர் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளக் கஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 5 இளைஞர்கள் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயணித்த வானில் இருந்து  7550 மில்லிகிராம் பக்கட் செய்யப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதாகவும்,குறித்த வான் தியகல-நோட்டன் பிரிட்ஜ் வீதியில் பயணித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் புஸல்லாவை பகுதியைச் சேர்ந்த 22 வயதானவர்கள் என்றும்,இவர்கள் இன்றைய தினம்(4) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .