2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஏழு மாதங்களில் 92 இந்திய மீனவர்கள் கைது

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், கடந்த ஏழு மாதங்களில் 92 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

ஜனவரி மாதம் 16 மீனவர்களும் மார்ச் மாதம் 20 மீனவர்களும், ஏப்ரல் மாதம் 13 மீனவர்களும், ஜூன் மாதம் 16 மீனவர்களும், ஜூலை மாதம் 27 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த மீனவர்களிடமிருந்து 19 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும், சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கமைய பருத்தித்துறை, ஊர்காவற்துறை, மற்றும் மல்லாகம் நீதிமன்றங்களினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால், இவர்களின் படகுகள் மற்றும் சான்றுப்பொருட்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .