2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 26 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சந்தேநபர்களின் விளக்கமறியலையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரையில் நீடித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய இந்த வழக்கில் குறிப்பிடப்படும்படியான விடயங்கள் எதுவும் மன்றில் விசாரணை செய்யப்படவில்லை. இதனையடுத்து, சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .