2024 மே 09, வியாழக்கிழமை

திறந்த பல்கலைக்கழக யாழ். பிராந்திய நிலையத்தில் மீள் பதிவுகள்

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 05:16 - 1     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

இலங்கை திறந்த பல்கலைக்கழக யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தில் பொது ஆங்கில சான்றிதழ் கற்கைநெறிக்கு மாணவர்களுக்கான மீள்பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை யாழ். பிராந்திய நிலையத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என இணைப்பாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய நிலையத்தில் இளைஞர் அபிவிருத்தி சான்றிதழ் கற்கைநெறிக்கு பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமைக்கு காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை பிராந்திய நிலையத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு இணைப்பாளர் மேலும் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 1

  • இ.லங்சி Sunday, 16 January 2022 04:15 PM

    புதிய அனுமதி பெறுவது எப்படி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X