2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ் நாட்டு அரசியல் எதிரப்புணர்வால் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிக்கும்

Kogilavani   / 2011 ஜூன் 15 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கை அரசு தொடர்பாக தமிழ் நாட்டு அரசின் அரசியல் எதிர்ப்புணர்வால் இந்திய மீனவர்களின் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் தென்பகுதி மீனவர்களிடம் அதிகரித்துள்ளதாக நீர்கொழும்பு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத் தலைவர் எம்.ஹேமன் குமார தெரிவித்துள்ளார்.

 

இன்று புதன்கிழமை காலை வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத்தில் அதன் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக கடற்தொழில் அமைச்சுடன் வெகுவிரைவில் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளோம். வடகடலில் இந்திய மீனவர்களின் அதிகரித்த ஊடுருவலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களின் வருகையை தடுத்து வருகின்றனர். அவர்களின் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகை குறைவடையும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் எஸ்.தவரெட்ணம், 'இந்திய மீனவர்கள் ஒருபுறம் தென்னிலங்கை மீனவர்கள் மறுபுறம் இரண்டுக்கும் நடுவே வடமாகாண மீனவர்கள் தவிப்பதாக' குறிப்பிட்டார்.

அத்துடன், இந்திய மீனவர்கள் வடகடலுக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதினால் வடகடல் வளங்கள் குறைவடைவதாகவும் இந்திய மீனவர்கள் இனிவரும் காலங்களில் வடகடலுக்குள் அத்துமீறி நுழைந்தால் வன்முறையில் இறங்காமல் பேச்சுவார்த்தை மூலம் மீனவர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியோடு தென்னிலங்கை மீனவர்கள் வடமராட்சி கிழக்கு கடற் பரப்பிலும் முல்லைத்தீவு கடற்பகுதியிலும் பாரிய சிலிண்டர்களைப் பயன்படுத்தி ஆழ்கடலில் கடல் அட்டை பிடிக்கின்றார்கள்.

இதனால் எமது வடகடல் வளம் மிகவும் பாதிப்படைகின்றது. அத்தோடு அந்த அனுமதி வடகடல் மீனவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையினால் எமது மீனவ சமூகம் பாதிப்படைந்துள்ளது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .