2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழில் வாள் வெட்டு: இளைஞன் படுகாயம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 23 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அரியாலை மற்றும் குருநகர் ஆகிய இடங்களைச்சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குருநகர் பகுதியில் வைத்து  இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 24 வயதான அன்டன் சுரேந்திரன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் இருந்த இளைஞர் குழுக்களுக்கிடையிலேயே இந்த கைக்கலப்பு ஏற்பட்டதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .