2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 490 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டு மீண்டும் பாடசாலைகளில் இணைப்பதற்கான நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய நன்னடத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட உளவள இணைப்பாளர் கு.கௌதமன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கினார்.

வடமாகாணத்தில் 38 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகிய நிலையில் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்நிலையில், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தி கல்விச் செயற்பாடுகளை மாணவர்களுக்கு புகட்ட வேண்டுமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .