2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ்.பல்கலை நுண்கலைப்பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்களினால் கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நுண்கலைப்பீட மாணவர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றினை இன்று (24) முன்னெடுத்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத கும்பல் நுண்கலைப்பீட வளாகத்தில் வைத்து மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகினார்கள்.

இந்நிலையில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் நடவடிக்கையினைக் கண்டித்து நுண்கலைப்பீட மாணவர்கள் இன்று காலை 10 மணியிலிருந்து சுமார் ஒரு மணித்தியால கண்டனப் போராட்டத்தை நடத்தினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .