2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கண்ணிவெடி வெடித்ததில் கண்களை இழந்த இராணுவ வீரர்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, கி.பகவான்

யாழ்.கிளாலிப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் கண்ணிவெடியொன்று வெடித்ததில் தனது இரண்டு கண்களையும் இழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (24) காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற இந்த வெடி விபத்தில் மிருசுவில் கேற்பேலி இராணுவ முகாமைச் சேர்ந்த சமன் குமார (வயது 27) என்ற  இராணுவ வீரரே படுகாயமடைந்தவராவார்.

படுகாயமடைந்த இவர் முதலில் சாவகச்சேரி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .